Thursday, April 11, 2024

“அவர் இல்லாமல் கதை எழுத முடியாது!”: வருத்தப்பட்ட லோகேஷ் கனகராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாநகரம் படத்தின் மூலம் திரையுலகத்துக்குள் நுழைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தந்து அசத்தினார். தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை சொல்லாத ஒரு விசயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அவர், “ஒன்பது வருடங்களில் பல கதைகளை முழுதாக எழுதி வைத்திருக்கிறேன். இவற்றில் எல்லா கதாபாத்திரங்களையும் ஒருவரை மனதில் வைத்தே எழுதினேன். அவர் அருண் அலெக்சாண்டர். மாநகரம் படத்துல முக்கிய வில்லனாக வருவார். கைதி படத்துல கார்த்தி முதுகுல கத்தியால குத்தும் கதாத்திரத்திலும், மாஸ்டர் படத்துல முதல் சீன்ல சேதுவை கொல்றவராகவும் நடிச்சிருப்பார்.

அவரை என் அண்ணன் என்றும் சொல்லலாம். அற்புத நடிகர். வில்லன், காமெடியன், காரெக்டர் ரோல் என்று எந்த கதாபாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய நடிகர். அவரை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு கதையையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கினேன்.

அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரை நினைத்து எழுதுவது சிரமமாக ஆகிவிட்டது” என நெகிழ்ச்சியுடன் கூறிய லோகேஷ் கனகராஜ் கண்கலங்கிவிட்டார்.

- Advertisement -

Read more

Local News