தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். சினிமாவில் தோல்வி,வெற்றி என பல சவால்களை கடந்து வந்தவர். கிளமர் ரோலில் இருந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில்அஜித்துடன் அவர் நடித்த ’ஆரம்பம்’ திரைப்படத்தில் ஒரு காட்சிக்கு புல்லட் புரூஃப் ஜாக்கெட் தேவைப்பட்டுள்ளது.ஆனால் சரியான நேரத்திற்கு கிடைக்காததால் விஷ்ணு வர்தனுக்கு கோபம் வந்துவிட்டது. அங்கிருந்த உதவி இயக்குநர்களிடம் கோபத்தை காட்டியிருக்கிறார்.
அதைக் கவனித்த நயன் யாரும் வேலை பார்க்க வேண்டாம் நானே பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டார். படப்பிடிப்பை க்ளாப் அடித்து ஆரம்பித்திருக்கிறார்.அவர் செய்வதை அங்கிருப்பவர்கள் பேசிக்கொள்ள சத்தம் போடாதீர்கள் என உரத்த குரலில் கூறியிருக்கிறார். எதுவும் கூறமுடியாமல் அமைதியாகிவிட்டாராம் விஷ்ணுவர்தன்.இந்த அனுபவத்தை படத்திற்கு டயலாக் எழுதிய சுபா ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.