Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

நாக அம்மனின் பக்தையாக பிந்து மாதவி நடிக்கும் படம் ‘நாகா’..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அடிதடி’, ‘மகா நடிகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘ குஸ்தி’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன், எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் ‘நாகா’.

தயாரிப்பாளர் கே.முருகன் ஏற்கனவே பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் ‘கருட பஞ்சமி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்போது இரண்டாவது படைப்பாக இந்த ‘நாகா’ படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்றும் மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக நடிகை பிந்து மாதவி நடிக்கிறார். இதேபோல் தமிழ் பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெய்சா வில்சனும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிகர் ்ரீகாந்த் நடிக்கிறார். படத்தில் யாரும், யாருக்கும் ஜோடி இல்லை.

மேலும், கருணாகரன், அறிமுக நடிகரான விஜய் நெல்லிஸ், மும்பை நடிகர் ரிகின் சாய்கல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.சதிஷ்குமார், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, படத் தொகுப்பு – பிரவின் பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், நிர்வாக தயாரிப்பு – S.சரவண  ரவிக்குமார், மக்கள் தொடர்பு –  ஜான்சன்.

இந்தப் படத்தை எழுதி, இயக்கவிருக்கும் இயக்குநர் சார்லஸ், ‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோவில்கள் மற்றும் நாகநாத சுவாமி கோவில்களின் ஸ்தல புராணங்கள் எல்லாம் நாகங்களின் ராஜா, தன் இனத்தைக் காக்கும்படி சிவனை வழிபட்ட இடம்’ என்றே குறிப்பிடுகின்றன. இதுதான் இந்தக் கதைக்கான தொடக்கப் புள்ளி.

நம்மில் பலருக்குமேகூட தமிழகத்தில் ‘நாக நாடு’ என்று ஓர் நாடு இருந்தது தெரியாது. நாகப்பட்டிணம், நாகூர் பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோர பகுதியில் தொன்மையான நாக நாடு இருந்தது. அவற்றுக்கும் நாகராஜா கோயில்களுக்கும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாகலோகத்துக்குமான தொடர்பை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்தக் கதை, தற்கால சமூகப் பிரச்சனை ஒன்றையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த  உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து வந்து சங்காரம் செய்து அழித்து ஒழிப்பதே நாகா’ படத்தின் ஒன் லைன்.

புராணங்களில் சொல்லப்படுகிற நாக லோகம் இந்தக் காலத்திலேயும் உண்மையாக இருக்கத்தான் செய்கிறது என்பதை கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சியுடன் பிரம்மாண்டமாக சொல்லப் போகிறார்கள். படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்காக மட்டும் 3 கோடி ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாம்.

‘கடல் ஆழத்திலிருந்து வெளியே வரும் ஐந்து தலை ராட்சத நாகம்’, ‘உடலில் அணிகலன்களாகப் பாம்புகளையே அணிந்த மானஸா தேவி’ என்கிற நாக அம்மனின் மலைக்க வைக்கும் தோற்றம்’ என்று சிறுவர் முதல் பெரியவர்வரை ரசிக்கத்தக்க பிரம்மாண்டமான விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் இந்த ‘நாகா’ படம் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வருகிற 27-ம் தேதி முதல் பாண்டிசேரியில் இந்தப் படத்தின் படப்பிப்பு ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து, ஹம்பி, கேரளா கடற்கரையோரம் என தொடர்ந்து 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

- Advertisement -

Read more

Local News