பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த மனிஷா, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படம் மூலம் தமிழில் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து இந்தியன்,முதல்வன், என சூப்பர் ஹிட் படங்களில் தோன்றினார். 90களில் கனவு கன்னியாக வலம் வந்தார்.
2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடால் விரைவில் விவகாரத்து பெற்றார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “விளையாட்டாக ஆரம்பித்த மதுப்பழக்கம், விரைவில் என்னை ஆக்கிரமித்துவிட்டது. மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு போய்விட்டேன். மதுவுக்கே முக்கியத்துவம் தந்தேன். இதனால் என் வாழ்க்கையே அழிந்து நாசமாகவிட்டது. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன். ஆகவே எவரும் மதுவைத் தொடாதீர்கள்” என்று தெரிவித்து இருக்கறார் மனிஷா.