Friday, April 12, 2024

பிரபுதேவா-ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘மை டியர் பூதம்’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்துள்ள திரைப்படம் மை டியர் பூதம்’.

இப்படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா’ சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மற்றும் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை யு.கே.செந்தில்குமார் கையாள, படத் தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றியுள்ளார். பிரபுதேவாவின் நடனத் திறமைக்கு ஏற்ற பாடல் உள்ளிட்ட ஐந்து வகைகளில் டி.இமான் இப்படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி  பாடல்களை எழுதியுள்ளார். கலகலப்பான வசனங்களை தேவா எழுதியுள்ளார்.

இந்தப் படத்தை மஞ்சப்பை’ மற்றும் ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் N.ராகவன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் என்.ராகவன் பேசும்போது, “ஒரு பூதத்துக்கும், 10 வயதுக் குழந்தைக்குமான பிணைப்பும், பயணமும்தான் இந்தக் கதையின் முக்கியக் கரு. குழந்தைகளுக்கான ஃபேண்டஸி வகையைச் சேர்ந்த இப்படம் குடும்பப் பார்வையாளர்களால் முழுமையாக ரசிக்கப்படும்.

குழந்தைகளுக்கான படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாக இருக்கும். எனது ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும். இதற்காக அதி நவீன தொழில் நுட்பம் படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படத்தில் நகைச்சுவை மற்றும் இதர உணர்வுகள் சரியான கலவையில் இருக்கும். கதாபாத்திரத்திற்காக பிரபுதேவா தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டார். பூதமாக அவர்தான் நடித்துள்ளார். அவரது உடல் மொழியிலும் சிரிப்பை வரவழைத்துள்ளார்…” என்றார் இயக்குநர் என்.ராகவன்.

குழந்தைகளுக்கான முழு நீள ஃபேண்டசி திரைப்படமான இந்த ‘மை டியர் பூதம்’ படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வரும் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.

“படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனலும், ஓடிடி உரிமையை ஜீ-5 தளமும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளன. படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போல் இது அமைந்துள்ளது…” என்று இந்தப் படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News