தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழில் பேசுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், ‘திருப்பதியில் இருக்கேனே’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார். இந்தப் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.