Friday, April 12, 2024

ரியோராஜ்-பவித்ரா லஷ்மி நடித்திருக்கும் ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் ஆல்பம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும்வகையிலும், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், Noise and Grains நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

‘அஸ்கமாரோ’, ‘குட்டிப் பட்டாஸ்’ பாடல்களின் பிரம்மாண்டமான வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா ல‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘கண்ணம்மா என்னம்மா’. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை இயக்குநர் ஜே.பி.பிரிட்டோ இயக்கியுள்ளார்.

இயக்கம் – பிரிட்டோ JB, இசை – தேவ் பிரகாஷ், பாடல்கள் – A.S.தாவூத், பாடியவர்கள் – ஷாம் விஷால், நடன இயக்கம் – அபு & சால்ஸ், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, படத் தொகுப்பு – கிருஷ்ணா குமார், கிரியேட்டிவ் டைரக்டர் – கார்த்திக் ஶ்ரீனிவாஷ், பிஸினஸ் டைரக்டர் – மஹாவீர் அசோக், கண்டன்ட் டைரக்டர் – டோங்க்லி ஜம்போ, கலை – சசிகுமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், கலரிஸ்ட் – ப்ராங்ளின்.V, பப்ளிசிட்டி டிசைனர் – சிவா தமிழரசன், எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வைஷாலி S.V.

இப்பாடலின் வெளியீட்டு விழா சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்து கொள்ள… பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமுவும், நடிகை சுனிதாவும் கண்ணம்மா என்னம்மா’ பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் நடிகர் ரியோ பேசும்போது, “என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி இயக்குநர் பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains நிறுவனத்தினர் இதை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம்தான். இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலை பார்த்து ரசியுங்கள்…” என்றார்.

நடிகை பவித்ரா ல‌ஷ்மி பேசும்போது, “ஒரு இசை வெளியீடூ என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம், பெரிய நடிகர் இருந்தால்தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains நிறுவனத்திற்கு நன்றி.

இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் இந்த ஆல்பத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார்…” என்றார்.

*Noise & Grains சார்பில் கார்த்திக் பேசும்போது, *எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே நாங்கள் தனி ஆல்பங்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அதைத்தான் தற்போது செய்து வருகிறோம்.

‘குட்டிப் பட்டாஸ்’ பாடல் செய்து கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக ரியோவை சந்தித்தபோது, எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த ஐடியா பற்றி சொன்னார். அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்த பாடலை உருவாக்கினோம்…” என்றார்.

இயக்குநர் பிரிட்டோ பேசும்போது, “ரீகன்தான் இந்தப் பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்றுதான் சொன்னான். அதன் பின் பாடலை கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம்.

அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப் பாடல் பெரிய அளவில் உருவானது.

ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜாவின் உதவியில் இந்தப் பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப் பாடல், இவ்வளவு பெரிய அளவில் வெளியாவது மிகப் பெரும் மகிழ்ச்சி..” என்றார்.

- Advertisement -

Read more

Local News