Thursday, April 11, 2024

காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம், காந்தாரா. செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான இப்படம், கர்நாடகாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் சாதனை புரிந்தததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது.

ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பீர்களா.. எந்த படத்தை பார்க்க விரும்புகிறீர்கள்” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பெரும்பாலும் அனைத்து தமிழ்ப்படங்களையும் பாப்பேன். சமீபத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை ரசித்துப் பார்த்தேன். பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் காந்தாரா படத்தின் டப்பிங் பணிகளில் மூழ்கிவிட்டதால் தவரவிட்டு விட்டேன். விரைவில் அந்தப் படத்தை பார்த்துவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News