Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

அமீரின் பருத்திவீரன் பார்த்து ஆத்திரமான கலைஞர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் ஹிட் அடித்தது. பிரியாமணிக்கு தேசிய விருது பெற்றுத்தந்த படம் இது.

அப்போது கலைஞர் கருணாநிதிக்கு படம் திரையிடிட்டு காண்பிக்கப்பட்டது. பக்கத்தில் அமீர் அமர்ந்திருந்தார்.

கலைஞர் திடீரென கோபமாக, ‘யோவ் எந்த ஊருல இந்தப் படத்தை எடுத்தீங்க, இங்கு என்ன மின்கம்பங்களே இல்லையே,’ என கேட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன அமீர் , ‘தேனி சுற்று வட்டாரத்தில் எடுத்தோம். மின் கம்பங்கள், படத்துக்குத்  தேவையில்லை என்பதால் தூக்கிவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதற்கு கலைஞர், ‘ஓ அப்படியா, நான் கூட இன்னும் அங்கு கரண்ட் கம்பம் எல்லாம் போடவே இல்லையோ என்று பயந்து விட்டேன்’ என்றாராம்.

இதை பல வருடங்களுக்குப் பிறகு விழாவில் பகிர்ந்து கொண்ட அமீர், ‘கலைஞரின் பார்வை எத்தனை கூர்மையனது என்பதே நேரில் அறிந்துகொண்ட சம்பவம் இது’ என வியப்புடன் கூறினார்.

 

 

- Advertisement -

Read more

Local News