தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாரினி நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12-ம் தேதி துவங்கவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை 7Screen Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள் என்று கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ள சமந்தா தற்போது கைவசம் இந்த படம் மட்டுமே வைத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு படங்களை எச்சரிக்கையுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அவர். ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு பிறகு நடிக்கும் தமிழ் படம் இதுதான்.
கொரோனா பாதிப்பினால் உலகமே இயங்காமல் இருந்த சூழலில் இந்தப் படமும் மூலையில் முடங்கியது. இப்போது அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுவிட்டதால் அடுத்த மாதம் 12-ம் தேதியன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.