Saturday, September 21, 2024

‘காசேதான் கடவுளடா’ படப்பிடிப்பு முடிந்தது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் R.கண்ணனின் இயக்கத்தில்  மீண்டும் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!

இந்தப் படத்தை இயக்குநர் கண்ணனின் Masala Pix நிறுவனம்,  MKRP Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி மற்றும் புகழ், சுப்பு பஞ்சு,  தலைவாசல்’ விஜய், மனோபாலா  உட்பட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

N.கண்ணன் இசையமைக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்தக் காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு முழுதாக நிறைவு பெற்றது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே திட்டமிட்டது போல், பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்து, ஒரே கட்ட படப்பிடிப்பில் முழுப் படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக் குழு.

தயாரிப்பாளரும்,  இயக்குநருமான ஆர்.கண்ணன் இது குறித்து பேசும்போது, “எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன். ஆனால், இந்தக் காசேதான் கடவுளடா’ முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்கியிருந்த பொது முடக்கக் காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

இவ்வளவு விரைவாக இப்படத்தை  முடிக்க நடிகர்கள்  மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் உட்பட்ட நடிகர்களும் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் மட்டுமேதான் காரணம், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் இது சாத்தியமானது.

விரைவில் படத்தின்  விஷுவல் புரமோவுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News