ஜெயம் ரவி சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும். ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். பின் அவரது அண்ணன் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய பெயருக்கு முன் ஜெயம் என்று சேர்த்துக் கொண்டார்.
தந்தை மோகன் சினிமாவில் தொகுப்பாளராக இருந்தவர். மகன் ரவி பற்றி கேட்ட போது. எனது மூத்த பிள்ளை அடக்கமானவன்,அறிவாளி,சொன்னதை கேட்பான். ஆனால் ரவி அப்படி இல்லை அடங்க மாட்டான். அவன் சின்ன வயதில் ரவி அழகாக இருப்பார். இரண்டாவது பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் அதனால் அடக்கம் இல்லாமல் வளர்ந்து விட்டான் என்றார். சேட்டை அதிகம் என்று சொல்வதற்கு பதில் இப்படி சொல்லி விட்டார்.
உடன் இருந்த ரவி அம்மாவுக்கு கோவம் வந்து விட்டது என்ன இப்படி சொல்ரீங்க…பையனை நீங்க எப்படி சொல்லலாம் என அந்த பேட்டில் ரவியின் அப்பாவிடம் சண்டைக்கு வந்து விட்டார்.
அம்மா பாசம்ன்னா சும்மாவா..பிள்ளையை விட்டு கொடுக்க மாட்டாங்க என்றார் ரவியின் அப்பா.