ஒரு காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் நடிகை சரோஜாதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் நடித்தவர். 2000க்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த அவர், “ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, என்னை டெல்லிக்கு அழைத்தார். தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட சொன்னார். ஆனால் நான், ‘நான் ஒரு பொதுவான ஆள். எனக்கு அரசியல் வேண்டாம்’ என்று கூறினேன்.
உடனே ராஜீவ் காந்தி, ‘அப்படியானால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்’ என்று கேட்டார். நானும் சத்தியம் செய்து கொடுத்தேன். இப்ப வரைக்கும் அந்த சத்தியத்தை நான் மீறவே இல்லை” என்று சரோஜாதேவி பேசியுள்ளார்.