Wednesday, October 9, 2024

பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா ஆர்யா? வெளியான சுவாரஸ்யமான அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். 2012-ஆம் ஆண்டு வெளியான “அட்டகத்தி” படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு “மெட்ராஸ்”, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த “கபாலி”, “காலா” போன்ற படங்களை தொடர்ந்து இயக்கினார். பின்னர் ஆர்யாவுடன் “சட்பட்டா பரம்பரை” மற்றும் “நட்சத்திரம் நகர்கிறது” போன்ற படங்களையும் இயக்கினார். பல படங்கள் வெற்றியையும் சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படத்தை இயக்கி வெளியிட்டார், இது வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு பா.ரஞ்சித், அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று முன்னதாகவே வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க உள்ளாராம். மேலும், அசோக் செல்வனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News