ஒரு பேட்டியில், பாக்யராஜிடம், “பாரதிராஜா பட்டறையில் இருந்து வந்தவர் நீங்கள்.. ஆனால் உங்களிடம் அவரது படத்தின் சாயல் இல்லையே..” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பாக்யராஜ், “கிரியேடிவிட்டி என்பது அவரவர்களுக்கானது. அதை வைத்து ஸ்கிரிப்ட் எடுத்துவிடலாம். அப்படி மனதில் தோன்றிய திரைக்கதையை, எப்படி காட்சிகளாக கொண்டு வருவது.. அதாவது ஷாட் பிரிப்பது.. எப்போது க்ளோஸ் அப் வைப்பது.. என்பதையெல்லாம் இயக்குநரிடம்தான் கற்றுக்கொண்டேன். அது இல்லாவிட்டால் படமே இல்லையே…” என்றார்.
எத்தனை உயரத்துக்கு வந்தாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் குருவை மறக்காத சிஷ்யன்.