Wednesday, September 18, 2024

ரசிகர்களுக்கு விஜய் சொன்ன முக்கிய விசயம் இதுதான்!: புஸ்ஸி ஆனந்த் தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த, பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய், மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதில் விஜய் என்ன பேசினார், அரசியல் பேசினாரா என்கிற கேள்விகளுடன் ஆவலாக செய்தியாளர்கள் காத்து நின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், “விஜய் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தார் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ள கூறினார்” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News