Thursday, April 11, 2024

“யோகிபாபு இருந்தாலே படம் ஓடிரும்..” – இயக்குநர் கே.பாக்யராஜின் நம்பிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions சார்பில் T.மதுராஜ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் ஷீ’.

இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, K.P.Y.பாலா, திலீபன் ஆகியோருடன்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். 

இப்படத்தினை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார்.  

புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப் பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் நியாஷ் பேசும்போது, “தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை.  தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம்.” என்றார்.

நடிகை ஷஞ்சிதா ஷெட்டி பேசும்போது, “படத்தின் தலைப்பு ஷூ’ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்தக் கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்…” என்றார்.

நடிகை கோமல் ஷர்மா பேசும்போது, “இது போன்ற கதைக் களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம். இப்படம் உருவாக தயாரிப்பாளர்தான் காரணம். நல்ல சமூகக் கருத்துகளைக் கொண்ட இந்தப் படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் கல்யாண் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் தங்களது கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்கு மிகப் பெரியது. இந்தப் படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.  இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நக்கீரன் கோபால் பேசும்போது, “இந்தப் படத்தின் கதைக் கருதான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன்.

தொடர்ந்து நல்ல  திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம்தான் வருகிறார்கள். அது பற்றிய உண்மையை நாம்தான் வெளிக் கொண்டு வர வேண்டியுள்ளது.  இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் பேசும்போது, “இவர்கள் மாதிரியான புதிய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது ஆரோக்கியமான விஷயம். இயக்குநர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குநர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News