Friday, April 12, 2024

“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 2-வது திரைப்படம் ‘கர்ணன்’.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். உடன் ‘நட்டி’ நட்ராஜ், யோகிபாபு, ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் முழுவதுமாக முடிவடைந்தது. தனுஷின் நடிப்பில் வெளியான ‘அசுரனின்’ அடுத்தப் படம் ‘கர்ணன்’ என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “படத்தைப் பார்த்து தான் அசந்துவிட்டதாகச்” சொல்லியிருக்கிறார்.

“இதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் மற்றும் படக் குழுவினரைப் பார்த்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும்” சந்தோஷ் நாராயணன் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக “கர்ணன் அனைத்தையும் கொடுப்பான்” என்று சொல்லி படக் குழுவினருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News