சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் கார்த்தி, “நகைச்சுவை நடிகர்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும். ஆனால் சூரி எனக்கு ஸ்பெஷல்.. அப்பவி முகத்தை வைத்துக்கொண்டு அவர் பேசும் டயலாக் டெலிவரியை மிகவும் சரிப்பேன்.
இருவரும் விருமன் படத்தில் சேர்ந்து நடித்த போது, படப்பிடிப்பின் இடையிலும் ஒரே காமடிதான். பொதுவாக காமெடி நடிகர்கள், ஹீரோவின் நண்பர்களாக வருவார்கள். ஆனால் அந்தப் படத்தில் நாங்கள் உறழினர்களாகவே வந்தோம்.
அப்போது இயக்குநரிடம், ‘சூரிக்கும் எனக்கும் ஒரு சண்டைக் காட்சியாக வையுங்கள்’ என விரும்பிக் கேட்டேன்.
அதற்குக் காரணம், சூரியை நகைச்சுவை நடிகர் என அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் குணச்சித்திர வேடத்தில் அற்புதமாக நடிக்கக்கூடியவர். அவரது அந்தத் திறமை வெளிப்பட வேண்டும் என நினைத்தே, அப்படி சண்டைக் காட்சி வைக்கச் சொன்னேன்” என்றார்.