Friday, April 12, 2024

“சிறுத்தை’-‘சிங்கம்’ படங்கள்தான் எனக்கு லாபத்தைக் கொடுத்தன” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்தியின் ‘சிறுத்தை’ மற்றும் சூர்யாவின் ‘சிங்கம்’ ஆகிய படங்கள்தான் தன்னுடைய தயாரிப்பில் லாபத்தையும் பெயரையும் பெற்றுக் கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார் தயாரித்திருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போது ஞானவேல்ராஜா இதைக் கூறினார்.

அந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “இந்த விழா அட்டக்கத்தி’ படத்திற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு போல் இருக்கிறது. இந்தப் படக் குழுவினரிடம் பழகும் போது கல்லூரி மாணவர்களிடம் பேசியது போன்று இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

‘அட்டக்கத்தி’ படத்தில் பணியாற்றிய பா.ரஞ்சித், தினேஷ் ஆகியோருக்கு எப்படி பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல் இந்த பன்றிக்கு நன்றி சொல்லி’ படக் குழுவினருக்கும் எதிர்காலத்தில் பெரிய படங்களில் பணியாற்றும் வாய்ப்பு அமையும்.

எனக்கு சினிமா வாழ்க்கையில் லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும்தான். அதாவது சூர்யா நடித்த ‘சிங்கம்’ படமும், கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படமும்தான் எனக்கு நல்ல லாபத்தையும், பெயரையும் பெற்று தந்தது.

அதுபோல் இப்போது ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படம் எனக்கும் படக் குழுவினருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்புகிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News