ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்தார். அந்த அனுபவம் குறித்து அவர், “அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுக்கும்போதே பயமாக இருக்கும். வெறும் உதட்டு அசைவுதான் என்றாலும் நடுங்கிப்போய்விடுவேன்.
ஒரு நாள், இரண்டு பக்க டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்தவுடன், நிஜமாகவே கதறி அழுதுவிட்டேன்” என்று கூறியிருக்கிறர் ஜெனிலியா.இது குறித்து ஷங்கர், “பிறகுநான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்து நடிக்கவைத்தேன்” என்றார்.