Friday, April 12, 2024

“கண்டிப்பா நாங்க திருந்துறோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பேச்சிலர்’ படம் பற்றிய சர்ச்சைகள், கருத்துக்களை படித்துத் தெரிந்து கொண்டதாகவும், அதில் இருந்து தங்களைத் திருத்திக் கொள்வதாகவும்” நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘பேச்சிலர்’ படத்தின் வெற்றி விழா கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நடிகர் G.V.பிரகாஷ் குமார் அந்த விழாவில் பேசும்போது, “ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில்தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் டில்லி சாரும், விநியோகஸ்தர் சக்தி சாரும்தான்.

ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள்தான். இந்தப் படம் சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சிலர் படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் 3-வது வாரத்தைக் கடந்திருக்கிறது.

நீங்கள் தந்த அறிவுரைக்கும், விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துக்களில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்கிறோம். இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News