புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் செல்வா, “பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பே, சினேகாவுக்கு பிரபல தொழில் அதிபருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தம்கூட நடந்தது. ஆனால் அந்தத் திருமணம் தடைபட்டது. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் பிரசன்னா என்கிற நல்ல மனிதரை சிநேகா திருமணம் செய்ய முடிந்தது” என்றார்.
அதன் பின்னர் திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தற்போது பிரசன்னா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு இதே போல் நடந்தது குறிப்பிடத்தக்கது.