Friday, April 12, 2024

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்க்கிறதா… இப்படம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Passion Studios சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம்.’

இந்தப் படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay,  பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு, ஒப்பனை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடகர்கள் – பென்னி தயால், வினீத் ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, புகைப்படங்கள் – ராம் பிரசாத், டி.ஐ. – ்ரீராம்.

சமீபத்தில் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படமும் இதே கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.

தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக் குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்த போதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்ற போவதில்லையாம். முதலில் வைக்கப்பட்ட  அதே பெயரில்தான் இந்தப் படத்தினை வெளியிட போகிறார்களாம்.

“படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது; நிச்சயமாக இரண்டு பக்க நியாயங்களை கூறுவதாக இருக்கும்” என படக் குழுவினர் உறுதியாய் கூறுகிறார்கள். இந்தக் கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும்.

இயக்குநர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி  படத்திற்கான திரைக்கதையை அமைத்துள்ளார்.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு  படம் எப்படி இருக்குமென்கிற பெரும்  ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.

Duplex’ என்ற வகையின் கீழ் உருவாகியுள்ளது. இது இரட்டை நிலையில் இருப்பதைக் குறிப்பது.

உதாரணத்திற்கு ஒரு வீடு இரு வாசல்’ என்பதே இதன் சாராம்சம். படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்குத் தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக  சொல்வதாக இருக்கும்.

இப்படத்தின் மேலும் ஒரு   சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை திரையுடன் ஒன்றிபோக செய்யும், பொழுதுபோக்கு படமாக அமையும் என படக் குழு உறுதியளிக்கிறது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தை கூறி பெரும் ஆர்வத்தை தூண்டும்விதமாக அமைந்துள்ளது.

இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படி அமைந்துள்ளது.

கும்பகோணம் மற்றும் சென்னையை சுற்றிய பகுதிகளில் இப்படத்தின்  படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் இசை, ட்ரெயிலர் மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News