“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார்.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவர் இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் அந்தணன், வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
அவர், “அஜித்தின் ஏ.கே.62-ல், த்ரிஷாவை நடிக்க வைக்கத்தான், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் விரும்பியது. ஆனால் இதை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏற்கவில்லை.
அவர் இதற்கு முன் இயக்கிய “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் நடித்து இருந்தனர். இவர்களில் சமந்தா கதாபாத்திரத்துக்கு முதன் முதலில் த்ரிஷாவைத்தான் விக்னேஷ் அணுகினார்.
அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட பட டைட்டிலில் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று போட விக்னேஷ் சிவன் முடிவெடுத்து த்ரிஷாவுக்கு தெரிய வந்தது. இது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இதனால் அவர் மீது விக்னேஷ் சிவனுக்கு கடும் கோபம். அதனால்தான் தான் இயக்கும் படத்தில் த்ரிஷாவுக்கு இடம் இல்லை என சொல்லிவிட்டார்” என்றார் அந்தணன்.