நடிகர் சிவகுமார், ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. 1960 – 80களில் முக்கிய கதாநாயகனாக இருந்தவர்.
அப்போது, அவர் நடித்த ஒரு படப்பிடிப்பில், காலையில் சூரியன் எழும் காட்சியை படமாக்க வேண்டும். இதை முதல் நாளே சொல்லி விட்டார் இயக்குநர். ஆகவே அதிகாலையிலேயே சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் தளத்துக்கு வந்துவிட்டனர்.
இயக்குனரை மட்டும் ஆளைக்காணவில்லை. இரவில் மது அருந்திய அவர், காலையில் தூக்கத்தில் இருந்தார். இதனால் டென்சன் ஆன சிவகுமார், உதவி இயக்குநர்கள் உதவியுடன் தானே அந்த காட்சியை இயக்கினார்.
டென்சனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சூழலை எதிர்கொள்வதில் சிவகுமாருக்கு நிகர் சிவகுமார்தான். அவரது இளமைக்குக் காரணம் இதுதான் போலும்!