Friday, April 12, 2024

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் ‘யானை’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில்  அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘யானை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம்வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி.

தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப் பெரிய வெற்றிப் படங்களை தந்த இவர், தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும்  நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது ஞாபகமிருக்கலாம். ரசிகர்களிடம் இந்தத் தலைப்பு மிகுந்த உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை – G.V. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – ஆண்டனி, சண்டை இயக்கம் – அனல் அரசு, கலை இயக்கம் – மைக்கேல், மக்கள் தொடர்பு – ஜான்சன், இணை தயாரிப்பு – G.அருண்குமார், தயாரிப்பு – டிரம் ஸ்டிக்ஸ்   புரொடக்ஷன்ஸ், Drumstick Productions எஸ்.சக்திவேல் 

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது.

இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக் காட்சிகள் உட்பட,  படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.

- Advertisement -

Read more

Local News