Friday, April 12, 2024

கமர்சியல் சினிமாவில் இருந்து விடுபட்ட சூர்யாவுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியத் திரையுலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இயக்குநர் சேரனும் தனது பாராட்டினைத் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்படியோ… ஒரு நடிகரை இந்த சினிமா கமர்சியல் சினிமாவிலிருந்து விடுவித்து மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்திருக்கிறது.. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் இதுபோல சமூகத்திற்கான படங்கள் செய்தால் சென்றடையும் வீச்சை.. வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால்.. நல்லது.

ஜெய்பீம்’ படம் பார்த்து தங்கள் ஹீரோக்களும் இது போன்ற சமூகத்திற்கான உண்மையான பிரச்னைகளை மையமாக வைத்து சோடனை இல்லாத சினிமாக்களை எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் அன்பு ரசிகர்கள் அவரவர் ஆதர்ச நாயகர்களுக்கு சொல்லுங்கள்.. வருடம் ஒரு படமாவது முயலுங்கள் என்று.. நன்றி…” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News