இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம், எந்திரன். முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட பல மடங்கு லாபத்தை இந்த படமும் வசூலித்தது.
இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி டூப் போட்டது பிரபல தமிழ் இயக்குனரின் மகன் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ், அப்போது சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு டூப் போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் மனோஜ் பகிர்ந்து இருக்கிறார்.