Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் கேள்வி எழுப்பியவரா..? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் 9 வருடங்களுக்கு முன் பதிவு செய்த ஒரு டிவீட் தற்போது இணையத்தில் சுழன்றடித்து வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு மே 24-ம் தேதியன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு டிவீட்டை பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்தப் பதிவில் பெட்ரோல் போட சென்ற சிவாவிடம், அங்கே வேலை செய்பவன் “ஸார். எவ்ளோக்கு ஸார் பெட்ரோல்..?” என்று கேட்க பதிலுக்கு சிவா அவனிடம், “ஒரு ரெண்டு ரூபாய்க்கோ.. நாலு ரூபாய்க்கோ வண்டி மேல தெளிச்சு விடு. வண்டியைக் கொளுத்திட்டுப் போயிடறேன்..” என்று பெட்ரோல் விலை ஏற்றத்தைப் பற்றிச் சொல்வதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் நாட்டுப் பற்றுடன் பேசியிருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.

அதோடு, இன்றைக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92 ரூபாய் 59 பைசாவாக உள்ளது. இன்றைய பெட்ரோல் விலை உயர்வுக்கு சிவகார்த்திகேயனின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News