நயன்தாரா நடித்து தயாரித்துள்ள, ‘கனெக்ட்’ படத்தன் பிரிவியூ காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கு நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் வந்திருந்தார். அந்த பிரிவியூ ஷோவில் கலந்து கொள்ளுமாறு ஜிபி முத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் படம் பார்க்காமலே வெளியேறினார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, “இந்த பிரிவியூ நிகழ்ச்சியில், ‘நயன்தாராவுடன் அமர்ந்து படம் பார்க்கலாம் வாங்க’ என்று சொல்லித்தான் அழைத்தார்கள். ஆனால், அங்கு அழைத்துச் சென்று, ஒரு ஓரமா உட்கார வைத்துவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் நயன்தாராவின் பவுண்சர்கள் தரக்குறைவாக பேசினார்கள். இதனால், படம் பார்க்காமல் வெளியில் வந்து விட்டேன்.
பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார். நான், ‘பாதி தூரம் வந்துட்டேன், மீண்டும் சந்திக்கலாம்’னு சொல்லிட்டேன்” என ஆதங்கத்துடன் தெரிவித்தார் ஜிபி முத்து.