Thursday, April 11, 2024

‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தடை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பான வழக்கில், சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி சிலர் காவல் துறையிலும், நீதிமன்றத்திலும் புகார் கொடுத்தனர். இதையொட்டி நடிகர் சூர்யா, மற்றும் இயக்குநர் ஞானவேலு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கினை எதிர்த்து நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஞானவேலுவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று கூறியதோடு வழக்கை ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News