‘டெடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர்ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்தை Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தக் ‘கேப்டன்’ படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – சக்தி செளந்தர்ராஜன், இசை – D.இமான், ஒளிப்பதிவு – S.யுவா, பாடல்கள் – கார்க்கி, படத் தொகுப்பு – பிரதீப் E.ராகவ், சண்டை இயக்கம் – R.சக்தி சரவணன், கலை இயக்கம் – S.S.மூர்த்தி, கிராபிக்ஸ் – V.அருண் ராஜ்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வட இந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக் குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்திருப்பதால், நடிகர் ஆர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் ஆர்யாவின் சமீபத்திய படங்களான ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘டெடி’ ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதால், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் இந்தக் ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.


