அரசியல்வாதியும், 75 வயது பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி, ‘கவர்ச்சியாக நடிக்க தயார்’ என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை ஹேமமாலினி. கவர்ச்சிக் காட்சிகளில் நடித்து நடிகர்களை கிறங்கடித்தவர். பிறகு நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் மற்றும் அரசியலில் கவனம் செலுத்தினார்.
சமீபத்தில் தர்மேந்திராவின் முதல் மனைவி மகன் சன்னி தியோல் மகனின் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் தர்மேந்திரா கலந்து கொண்டார். ஆனால் நடிகை ஹேமமாலினியோ அல்லது அவரின் இரண்டு மகள்களோ இத்திருமணத்தில் பங்கேற்கவில்லை. இத்திருமணத்தில் தர்மேந்திரா கலந்து கொண்டதால் அவருக்கும் ஹேமமாலினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் ஹேமமாலினி, “யாராக இருந்தாலும் நல்ல கதாபாத்திரத்துடன் வந்து என்னை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
அக்கதாபாத்திரம் எனது வயதுக்கு தகுந்த மாதிரி இருக்கவேண்டும். அக்கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கலாம்” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், “ எனது இரண்டு மகள்கள் இஷா மற்றும் அஹானா ஆகியோருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன். இனி குடும்பப் பொறுப்புகள் இல்லை. ஆகவே, திரையுலகில் கவனம் செலுத்துவேன்” என்று கூறியிருக்கிறார்.