Friday, April 12, 2024

“வீடு புகுந்து பாலியல் தொல்லை” – ராஜ் குந்த்ரா மீது பாலிவுட் நடிகை புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா நடிகைகளை மிரட்டி ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அதனை தனிப்பட்ட அப்ளிகேஷன் மூலமாக வெளியிட்டது தொடர்பான வழக்கில் மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுடன் சேர்த்து 11 பேர் இதுவரையிலும் கைதாகியிருக்கிறா்கள். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜ் குந்த்ரா கைதுக்குப் பிறகு பல மாடல் அழகிகளும், நடிகைகளும் தாங்களும் ராஜ் குந்த்ராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸீல் புகார் அளித்துள்ளனர்.

இதில் முதன்மையானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர்தான் கடந்த ஏப்ரல் மாதம் ராஜ் குந்த்ரா மீது போலீஸில் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இவர் கடந்த 27-ம் தேதியன்று மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது ராஜ் குந்த்ராவால் தான் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டேன் என்பதை வாக்குமூலமாக அளித்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

நடிகை ஷெர்லின் சோப்ரா தன்னுடைய வாக்குமூலத்தில் “2019-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என் மேனேஜரை தொடர்பு கொண்டு ஒரு ப்ராஜெக்ட் குறித்து என்னுடன் பேச வேண்டும் என்று கேட்டார். இதற்குப் பின்பு 2019 மார்ச் 27-ம் தேதியன்று எங்கள் இருவருக்குமிடையே பிசினஸ் மீட்டிங் நடந்து முடிந்தது.

அதன் பிறகு ஒரு நாள் திடீரென்று முன்னறிவிப்பு எதுவுமின்றி ராஜ் குந்த்ரா என் வீட்டிற்கு வந்தார். அவருடன் நான் மெசேஜ் மூலம் பேசும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் என்னை சமாதானப்படுத்துவதற்கா வந்ததாகச் சொன்னார்.

அப்போது திடீரென்று நான் தடுத்தும் கேட்காமல் என்னை முத்தமிடத் துவங்கினார் ராஜ் குந்த்ரா. “திருமணமான நபருடன் நான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. உங்கள் மனைவி ஷில்பா ஷெட்டி என்னாச்சு..?” என்று நான் ராஜ் குந்த்ராவிடம் கேட்டேன். அதற்கு அவரோ, “அது சிக்கலானது… நான் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒரே ஸ்ட்ரெஸ்தான்…” என்றார். பயமாக இருக்கிறது.. நிறுத்துங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் கூறியும் ராஜ் கேட்கவில்லை. கடைசியில் அவரிடம் இருந்து இருந்து தப்பித்து பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டேன். அவர் கிளம்பும்வரை வெளியே வரவில்லை…” என்று ஷெர்லின் சோப்ரா புகார் கூறியுள்ளார்.

ஷெர்லின் சோப்ராவின் இந்தப் புகாரையடுத்து ராஜ் குந்த்ரா மீது 2021 ஏப்ரல் மாதம் பாலியல் தாக்குதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜ் குந்த்ரா மீது இந்தியன் பீனல் கோட் 376, மற்றும் 384, 415, 420, 504 and 506, 354 (a) (b) (d), 509, ஐடி ஆக்ட் சட்டம் 67, 67 (A), sec 3 & 4 மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது என்ற பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆபாசப் பட வழக்கிலும் ஷெர்லின் சோப்ராதான் முதலில் போலீஸில் புகார் அளித்து, வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

ராஜ்குந்த்ரா நடத்தி வரும் Armsprime என்ற ஆபாசப் பட செயலி பற்றியும் ஷெர்லின் சோப்ராதான் காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார்.

இந்த ஆபாசப் பட வழக்கில் ராஜ் குந்த்ரா மீது இந்திய அரசியல் சட்டப் பிரிவின் ஏமாற்றுதல், அநாகரிகமான விளம்பரங்களைத் தயாரித்தல், வெளியிடுதல், பொது வெளி மற்றும் இணையத்தில் பெண்களை அவமானப்படுத்ததுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News