Wednesday, October 9, 2024

என்னுடைய 21 வருட திரைப்பயணத்தில் முக்கியமான படமாக ‘பிளாக்’ இருக்கும் – நடிகர் ஜீவா ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அவர் ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘கொரில்லா’, ‘ரவுத்திரம்’, ‘கலகலப்பு 2’ போன்ற படங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இப்போது அவர் ‘மாநகரம்’, ‘டாணாக்காரன்’ போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். இதில் ஜீவா கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கு ‘பிளாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு, ஒரே நாள் இரவில் நிகழும் சம்பவமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில், ஜீவா, இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி, மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, நடிகர் ஜீவா பேசுகையில், இந்த படத்தின் கதையை கேட்டவுடன் பிடித்தது. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக், ஆனால் அதை நான் பார்க்கவில்லை. இயக்குநர் என்னிடம் கதை கூறியபடி தான் இப்படத்தில் நடித்தேன். என்னுடைய 21 வருட திரைப்பயணத்தில் முக்கியமான படமாக ‘பிளாக்’ இருக்கும். நான் திரைக்கு வந்த முதல் 10 வருடங்களில் பல புதிய முயற்சிகளை எடுத்தேன். அதன்பின், தற்போது இந்த படத்தில் அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இந்த படம் கண்டிப்பாக வித்தியாசமானதும் சுவாரஸ்யமானதும் ஆக இருக்கும். படம் முழுவதும் புரிந்துகொள்ள இன்னும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். இப்படத்தில் நான் மட்டுமே பொழுதுபோக்காக இருப்பேன், ஏனெனில் படம் முழுக்க சீரியஸாக நகரும். எனது சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வர இந்த படம் உதவியாக இருந்தது என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News