திரைப்படங்களுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்களை கதாசிரியர் கலைஞானம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சொல்லி வருகிறார். அதில் ஒன்று..
“ரத்தக்கண்ணீர் படத்தில் வரும், எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாபாத்திரத்தையும் யாரும் மறக்க முடியாது. அந்த கதை, நாடகமாக நடத்தப்பட்டபோது, அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலகுரு. ஒரு கட்டத்தில் நாடகங்கள் அருகிப்போக, திரைத்துறை பக்கம் வந்தார்.
பாரதிராஜா முதன் முதல் இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் அசோசியேட் இயக்குநராக சேர்ந்தார். அவர்தான், பாக்யராஜை பாரதிராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
பாக்யராஜ் அடுத்தடுத்து நடிகர், இயக்குநர் என வளர்ந்துவிட்டார். பாலகுரு உதவி இயக்குநராகவே தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டார்.
இதை அறிந்த பாக்யராஜ், அவரதை தனது கதை இலாகாவில் சேர்த்துக்கொண்டார். அவர் பல நல்ல சீன்களை சொல்வார். அவரை மிக உயர்வாக நடத்தினார் பாக்யராஜ்.
அது மட்டுமல்ல அவரையும் அவரைப்போல தனக்கு உதவி செய்தவர்களையும் தயாரிப்பாளராக்கி லாபம் சம்பாதித்துக்கொடுத்தார்” என்றார் கலைஞானம்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..