திரைப்பட பின்னணி பாடகி மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் சின்ன குயில் சித்ரா. மலையாளம், தமிழ்,தெலுங்கு, இந்தி, ஒரியா, அசாமிய, வங்காளம்,போன்ற பல இந்திய மொழி படங்களில் பாடி இந்திய ரசிகர்களின் மனதில் பதிந்தவர் சித்ரா.
இன்னும் பலரது இதயத்தில் அவரது பாடல் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.இப்போது தொலைகாட்சிகளில் இசைப்போட்டி அதில் நீதிபதியாக கலந்து கொள்வார்.
சில வருடங்களுக்கு முன் மேடையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்தது.அப்போது பாடகர் பாலசுப்பிரமணியமும் கலந்து கொண்டார். சித்ரா கலந்து கொள்ளும் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை கண்ணா.. இந்த இடத்தில் கொஞ்சம் ஸ்ருதி விலகியது…கொஞ்சும் குரலில் நடித்தும் பேசியும் கலாய்த்தார் பாடகர் பாலசுப்பிரமணியம்.
அங்கிருந்த அனைவரும் சிரிக்க, அவர் பேசுவது,கலாய்ப்பதை ரசித்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் சின்ன குயில் சித்ரா.