பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.
அவர் சமீபத்தில் அந்த படத்தில் பாலாவுடன் நடந்த சம்பவத்தை பற்றி யூடியூப் சேனலில் பேட்டி அளித்தார்.
இயக்குனர் பாலா ’நான் கடவுள் ’படத்தில் நடிக்க என்னை அழைத்தார் நானும் ஒப்புக் கொண்டேன். படத்தில் நான் தாடி வைத்திருக்க வேண்டும். 8 மாதங்கள் ஆனது தாடி வளர அதன் பிறகு தான் படப்பிடிப்பு நடந்தது.
படத்தில் எனது மனைவியாக வரும் பெண் என்னை அடிக்க வேண்டும். அது தத்துருபமாக வரவேண்டும் என்பதால் பாலா என்னை வேகமாக அடிக்கச் சொன்னார்.
அவர் அடித்ததில் மயங்கி விட்டேன். அடுத்து பாலத்தில் இருந்து குதிக்க வேண்டும் நான். தண்ணீரில் கற்கள் கிடந்தன குதித்ததில் காலில் காயம் பட்டது. அதை பொருட்படுத்தாத பாலா மீண்டும் மீண்டும் குதிக்க சொல்லி டேக் ஓகே சொன்னார்.
அதன் பிறகு எனது அம்மா இறப்பு மொட்டை அடித்து தாடியை எடுக்க வேண்டும் அதற்கும் அனுமதி இல்லை. எனது படம் முடியும் வரை நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றார்.
அந்த படம் முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது அப்படியே சுற்றினேன். படத்தில் நடிப்பவர்களை கஷ்டப்படுத்தி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார் இனிமேலாவது திருந்த வேண்டும்.
இல்லையென்றால் பாலா என்ற இயக்குனர் காணாமல் போய்விடுவார் என்றார் அழகன் தமிழ்மணி