மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தனக்கான படங்களை துல்லியமாக கணித்து ஒப்புக்கொள்வார். ஆனால் அவரே தவறாக கணித்து தவற விட்ட படம் ஒன்று உண்டு. அதுவும் பான் இண்டியா திரைப்படம்.
ஆம்.. பாகுபலி திரைப்படத்தில், ராஜமதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் ராஜமௌலி, முதலில் அணுகியது ஸ்ரீதேவியைத்தான்.
ஆனால் புலி படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்து எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே என நினைத்து மறுத்துவிட்டார் ஸ்ரீதேவி.
ஆனால் பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல.. ராஜமதா சிவகாமி தேவி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.
அட என் கணிப்பு தவறாகிவிட்டதே என ஈகோ பார்க்காமல் பிறகு ராஜமவுலியிடம் வருத்தத்துடன் சொன்னாராம் ஸ்ரீதேவி.