Wednesday, September 18, 2024

இப்படி நடிக்க மாட்டேன்!: மறுத்த அரவிந்த்சாமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ரோஜா,பம்பாய்,மின்சார கனவு, இந்திரா, போன்ற படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு  சினிமாவில் இருந்து விலகி முழு நேர தொழில் அதிபராக இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்டைலாக வலம்  வந்தார்.  படத்தில் நீங்கள் இந்த கேரக்டருக்கு சிகரெட் புகைப்பது போன்று இருந்தால் நல்ல இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் சிகரெட் பிடிப்பது தண்ணி அடிச்சிட்டு டம்ளரை உடைப்பது போன்ற காட்சிகள் வேண்டாம். அதற்கு பதில் நான் சுவிங்கம் வாயில் போட்டுக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News