Saturday, September 21, 2024

அப்பு குட்டி போட்ட சபதம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த நாதன்கினறில் இருந்து காய்கறி வியாபாரம் பார்க்கும் அப்பாவுக்கு துணையாக சென்னை வந்தார் அப்புகுட்டி. எட்டாவது வரை படித்த அவர் வடபழனியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் கிளீனராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

அவர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒருவர் நீ சினிமாவில் நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார் அதற்கு சரி என்று தலையாட்டி உள்ளார் அப்புகுட்டி.

அதில் இருந்து அவருக்கு சினிமா மேல் ஆசை ஏற்பட பழைய சைக்கிள் ஒன்றில் எடுத்துக் கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றிலும் தனது போட்டோவை கொடுத்து வாய்ப்பு கேட்டுள்ளார். கையில் இருந்த பணமும் காலியாக வாய்ப்பும் இல்லாமல் இருக்க நீ சென்னையில் இருக்க வேண்டாம் ஊருக்கே போய்விடு என்று அப்பா கூறியுள்ளார்.ஆனால் நான் சினிமாவில் நடித்து விட்டு தான் ஊருக்கு போவேன் என்று சபதம் போட்டிருக்கிறார் அப்பு.

அப்பு குட்டி அவர்கள் நண்பர்களுடன் வடபழனி கமலா தியேட்டருக்கு பின்புறம் இருக்கும் டீக்கடையில் வழக்கமாக சந்திப்பது உண்டு. இயக்குனர் சுசீந்திரனும் இந்தக் கடைக்கு வருவது வழக்கமாம். டீ கடைகாரர் அப்புகுட்டிக்காக இயக்குனரிடம் சிபாரிசு செய்துள்ளார்.

அதன் பிறகு மறுமலர்ச்சி படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழுவில் இருக்கு சொல்லும் படியான கதாபாத்திரம் அமைந்தது. அடுத்து அழகர் சாமியின் குதிரை யில் கதாநாயகனாக நடித்தார். அவர்  அம்மாவிடம் போட்ட சபதம் நிறைவேறிய பிறகு சொந்த ஊருக்கு சென்றாராம்.

- Advertisement -

Read more

Local News