ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. ரஜினி, கமல், கார்த்தி, சத்யராஜ் என அப்போது இருந்த பல முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார்.
இதற்கிடையே அவர் தெலுங்கிலும் நடிக்க துவங்கினார். அப்போது நடிகர் நாகார்ஜுனாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது பிறகு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
அந்த காலகட்டத்தில், “நான் பட்டுப்புடவையை விரும்புவதில்லை. புழுக்களைக் கொன்று தயாரிக்கப்படும் அந்த புடவையை அணிவதை தவிர்க்கிறேன்” என்று ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அவர்களோ, “அமலாவுக்கு புடவையே பிடிக்காதாம்!” என்று தலைப்பு வைத்துவிட்டார்கள்.
இதைப் பார்த்து கோபமான அமலா, நேராக அந்த பத்திரிகை அலுவலகத்துக்கே சென்று தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு மறுப்பு வெளியிட்டது அந்த பத்திரிகை.
.