Thursday, April 11, 2024

அஜித்தின் வித்தியாசமான குணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகராகத்தான் ரமேஷ் கண்ணாவை நமக்குத் தெரியும். அவர் தொடரும் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய ஒரே படம் இதுதான். நாயகன் அஜீத்!

இது குறித்து ரமேஷ் கண்ணா கூறிய சுவாரஸ்ய தகவல்:

“ உதவி இயக்குநரா பல படங்களில் பணியாற்றிய  எனக்கு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.  ஆனா அன்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை.

அப்புறம் மீண்டும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட அசிஸ்டென்டா சேரந்தேன். அவர் இயக்கியபெரிய குடும்பம்படத்தில் வசனம் எழுத வாய்ப்பு அளித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது.

அந்த படத்தின் தயாரிப்பாளர், நான் சொந்தமாக படம் இயக்க வாய்ப்பு அளித்தார். ஜெயராமை ஹீரோவா புக் ஆனார்.  படப்பிடிப்பு துவங்கிய மூன்றாவது நாளே  ஃபெப்சி ஸ்டைரக் ஆரம்பித்தது. அதோட படப்பிடிப்பு நின்றுவிட்டது. .

ஒரு வருடத்துக்குப் பறகு படத்தை ஆரம்பிக்க நினைத்தோம். ஆனால  ஜெயராம் வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

அடுத்து ஏகப்பட்ட பேர்கிட்ட கதை சொன்னேன். யாரும் ஒப்புக்கொள்ள வில்லை. படத்தோட நாயகன், ஒரு குழந்தைக்கு அப்பா என்பதுதான் காரணம்.

அப்போ ஜெயராம், “அஜித்துக்கு கதை சொல்லுங்களேன்” என்றார்.

அந்த நேரத்துல தான்காதல் கோட்டைபெரும் வெற்றி பெற்றிருந்தது.  ஆகவே அவர் ஒப்புக்கொள்வாரா என் தயங்கினேன்.

ஜெயராம், “நான் அஜித்கிட்ட பேசுறேன். நீங்க போய் பாருங்க” என்றஆர்.

நானும் அஜித்தை பார்த்து கதை சொன்னேன். உடனே ஒப்புக்கொண்டார்.

நான் இயக்கிய முதல் படம் வெளியாகவில்லை.. அடுத்த படம் பாதியில் நின்றுவிட்டது.. ஆனாலும் அஜீத் நடிக்க ஒப்புக்கொண்டார். சென்டிமெண்ட்டிலேயே வாழும் திரையிலகில் இது பெரிய அதிசயம்தான்.

இது பற்றி சந்தோசத்துடன் ஜெயராமிடம் சொன்னேன். அதற்கு அவர், “அஜீத் ஒரு ஜெம். சென்டிமெண்ட் பார்க்கக்கூடாது என்பதுதான் அவர் சென்டிமெண்ட்” என்றார்.

அது சத்தியமான உண்மை” என நெகிழ்ச்சியுடன் கூறினார் ரமேஷ் கண்ணா.

- Advertisement -

Read more

Local News