‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என்றழைக்கப்படும் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ச் சினிமாவில் பல்வேறு வகையான கதைகளில் நடித்து பெரும் புகழைப் பெற்றிருக்கிறார்.
அடுத்து, நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், ‘மைம்’ கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநரான S.G.சார்லஸ் இயக்கம் செய்கிறார்.
படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.