Thursday, October 10, 2024

அட இது சண்டை இல்லையாம்… பிராங்காம்… இப்படி ஏமாத்திடாங்களே ! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 இல், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியாளர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நடுவில் பிக்பாஸ் ஒரு அதிரடி ட்விஸ்ட் செய்தார், அதன்படி ஆண்கள் அணியில் இருந்த முத்துக்குமரன் பெண்கள் வீட்டிற்குள் சென்றுள்ளார். அதேபோல், பெண்கள் அணியில் இருந்து பவித்ரா ஜனனி ஆண்கள் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த இருவரும் வீட்டிற்குள் செல்லும் முன்பே, அடுத்ததாக என்ன செய்யலாம் என்பதற்கான திட்டங்களை முன்கூட்டியே அமைத்துவிட்டு சென்றனர்.

பவித்ரா ஜனனியிடம் விஷால் டி பேசி தாக்குப்பிடிக்க, அவருக்கு கடுமையாக கோபம் வந்து, இதனால் இருவருக்குமே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் பெரும் சண்டையில் சமாதானம் செய்யவும் நியாயம் பேசவும் வந்த ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கும் பின்னர் சண்டை நடந்து, இவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கப் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பெண் போட்டியாளர்கள் இந்நிலையில் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

இதற்கிடையில், சண்டையில் கீழே விழுந்து தனது கையில் அடிபட்டதாக அருண் பிரசாத் நீண்ட நேரம் வாதாடினார். இறுதியில், ரவீந்தரும் ரஞ்சிதும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்கச் செய்யப்பட்டது. அப்போது தான் இவர்கள் செய்ததெல்லாம் பிராங்க் விளையாட்டு என்று தெரிந்தது. இதனால் பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இவர்கள் நம்மை வைத்து கேம் ஆடுகிறார்கள், நாம் தான் ஏமாளி என பெண்கள் அணியினர் டென்ஷன் அடைந்தார்கள் மிகவும் ஏமாற்றம் புலம்பல்களோடு அந்நாள் முடிவுற்றது.

- Advertisement -

Read more

Local News