‘மலையூர் மம்பட்டியான்’ படத்தில் அறிமுகமான தியாகராஜனும், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் அறிமுகமான அவரது மகன் பிரசாந்த்தும் தமிழ்த் திரையுலகின் தவிர்க்நட்சத்திரங்கள்.
ஆனால், வெகுகாலம், தனது மனைவி, மகனை மறைத்தே வைத்து இருந்தார் தியாகராஜ ன்.
இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறினார்.
அவர், “எனக்கு திருமணம் ஆன விஷயத்தையே திரையுலகினருக்கு தெரியாமல் பல வருடங்கள் மறைத்து வைத்தேன். ஹீரோ இமேஜ் பாதித்துவிடுமோ என்கிற பயம்தான் காரணம்.
ஒரு நாள் சத்யராஜ் தியாகராஜனின் வீட்டிற்கு வந்தார். 12 ஆம் வகுப்பு முடித்திருந்த பிரசாந்த் அப்போது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்.
“தியாகராஜன் வீட்டில் இல்லையா?” என சத்யராஜ் கேட்க, அதற்கு பிரசாந்த் “அப்பா, வெளில போயிருக்காங்க” என கூறியிருக்கிறார். “நீ தியாகராஜன் பையனா?” என அவர் கேட்க அதற்கு பிரசாந்த் “ஆமாம்” என பதில் அளித்திருக்கிறார்.
எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற தகவலையும் ஒரு பையனும் இருக்கிறார் என்ற தகவலையும் சத்யராஜ் சினிமா துறையில் உள்ள பலருக்கும் சொல்லிவிட்டாராம். அப்படித்தான் திரையுலகத்துக்கு பிரசாந்த்தை தெரிய வந்தது” என்றார் தியாகராஜன்.