Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யா – பாலா இணையும் படம் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

தற்காலிகமாக ‘சூர்யா-41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19-வது  பெருமைமிக்க படைப்பாகும்.

இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

பாலாவின் இயக்கத்தில் சூர்யா ஏற்கெனவே ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது நடிக்கவிருக்கும் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட கதைக் களனில் உருவாக்கியிருகியுள்ளதாம். இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவின் காணாத ஒன்றாக இருக்கும் என்கிறது படக் குழு.

சூர்யாவுக்கு ஜோடியாக முதல்முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் தற்போதைய டாப் ஹீரோயினான கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. 

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலை இயக்கம் – மாயப்பாண்டி, படத் தொகுப்பு –  சதீஷ் சூர்யா. 

இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, “மீண்டும் பாலா சாரின் ‘ஆக்க்ஷன்’  சப்தத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கத் துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்…” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News