Friday, April 12, 2024

ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலியுடன் நடிக்கிறார் சூரி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், தயாரிக்கப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது 7-வது படத்தைத் தயாரித்து வருகிறார்.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கி வரும் இந்தப் படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘ரிச்சி’ படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. 

இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரியும் இணைந்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே.குமார் கவனிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன் பிறகு கேரளாவில் வண்டிப் பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.

தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிலிம் சிட்டியில் மிகப் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

மாநாடு’ படத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கலை இயக்குநர் உமேஷ், இந்த படத்திற்காக அழகிய ரயில் செட்டை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். 

இன்று இந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கு இயக்குநர் மிஷ்கின் திடீரென்று வருகை தந்து படக் குழுவினரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 

மேலும் இயக்குநர் ராம், நிவின் பாலி மற்றும் சூரி உள்ளிட்ட படக் குழுவினருடன் உரையாடி படப்பிடிப்புத் தளத்தை தனது வருகையால் கலகலப்பாக்கினார் இயக்குநர் மிஷ்கின்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

- Advertisement -

Read more

Local News