Friday, April 12, 2024

“ராஜ்யசபா சீட் கொடுத்தால் அரசியலுக்கு வரத் தயார்” – நடிகர் சந்தானம் அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“எனக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் அரசியலுக்கு வரத் தயார்…” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையொட்டி இன்று காலை நடைபெற்ற இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “உங்களது நண்பர் உதயநிதி அரசியலில் தீவிரமாகிவிட்டார். நீங்களும் அரசியலில் நுழைவீர்களா..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சந்தானம் பதிலளித்தார்.

சந்தானம் தன் பதிலில், “ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்தால் ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன். போன முறையும் இந்த மாதிரி அரசியல் கேள்வியைக் கேட்டு என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டீர்கள். பா.ஜ.க.வில் சேரப் போகிறேன்’ என்று நீங்கள் எழுதிய கதைகளால் பல நாட்கள் பலரும் என்னைத் தொலைபேசியில் அழைத்து இதைத்தான் கேட்டார்கள்.

உதயநிதி சாருடன் இணைந்து படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தேன். காமெடிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அந்தந்த படங்களில் செய்தேன். இப்போதும் அதேபோல் அவருடன் படம் மட்டும்தான் பண்ணுவேன்.

இதேபோல் ஆக்‌ஷன் படங்களில் நடித்தால், “ஏன் ஆக்‌ஷன் படம்.. காமெடி படம் பண்ணுங்கள்..” என்கிறார்கள். “காமெடி படம் செய்தால் ஏன் ஆக்‌ஷன் படம் பண்ணுவதில்லை…” என்கிறார்கள். இப்படி பல பேர் குழப்புவதால்தான் சில சமயங்களில் அடுத்து ஆக்‌ஷன் படம் பண்ணலாமா என்றுகூட நான் யோசிப்பதுண்டு. இப்போதைக்கு மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை என் படங்களில் செய்து கொண்டிருக்கிறேன். முதலில் இதை சரியாக செய்வோம்…” என்று பதிலளித்தார்.

- Advertisement -

Read more

Local News